வெறுமை


 



 காற்று வீச மறுத்தது

 மலர்கள் வாசம் தரவில்லை

மொட்டுக்களும் மலர்தலை

 மறந்தே போயின.


 தேன் பருக  மறந்த

 வண்ணத்துப்பூச்சிகள்

 இரைக்க மறந்த

 வண்டினங்கள்

  இறக்கை மறந்த

 புள்ளினங்கள்


 பச்சை  இலைகளுக்குள்

 ஏதோ ஒரு சோகம்

 கனிகளிலும் முன் போன்ற தித்திப்பை

 காணவே இல்லை


 மின்மினிககளும்

 ஏதோ  காரணத்தால்

 ஒளி வீசவே இல்லை


 பட்டு  பூச்சியும் 

 பட்டாம்பூச்சியும்

 பேசிக்கொள்ளவே இல்லை


 என் மனதின் வெற்றிடம்

 இயற்கையிலும் பிரதிபலிக்க

 ஏதோ ஒரு வெறுமை

 எதனால்………?


Post a Comment

Previous Post Next Post

Android