தமிழின் பெருமை
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழ், தொன்மை தமிழ் ,
இன்பத்தமிழ் , எங்கள் உயிர் மூச்சாம் தாய் தமிழின் பெருமையை
உரைக்க வந்தேன் ……அனைவருக்கும் வணக்கம்.
‘கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்
காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழிந்திடும் பாலும்
தென்னை நல்கிய குளிர் இளநீரும் - இனியன என்பேன் எனினும்
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்’
என்று தமிழின் இனிமையை , இளமையை , பெருமையை
வாயார வாழ்த்தி போற்றிப் புகழ்ந்தார் எங்கள் பாரதிதாசன்.
ஆம் , உண்மைதான்! இன்று உலகிலே தோன்றிய மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றாக எங்கள் தாய் மொழியாம் தமிழ்மொழியும் சிறப்பிக்கப்படுகின்றது… பெற்ற தாய்க்கு சமமாக பிறந்த பொன் நாட்டுக்கும் மேலாக தமிழ் மொழி வணங்கப்படுகின்றது .வழங்கப்படுகின்றது…….. அதனால் தான் அன்றோ தமிழ் மொழிக்கு செம்மொழி என்னும் உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. செம்மொழியாம் தமிழ் மொழி உலகம் எங்கும் ஒலிக்கும் அழகு கண்டு தமிழ்த்தாய் உள்ளம் பூரித்து பிரகாசிக்கிறாள்…..
தமிழனின் பெருமையும்- உயர்வும், செம்மொழியாம் தமிழின் பெருமையும்
உரைத்திட உரைத்திட உள்ளம் தித்திக்கும்.
தமிழுக்கு அழகு சேர்ப்பது இலக்கண இலக்கியங்கள் ஆகும் மொழியின்
இனிமையை , மொழி ஆளுமையை, தித்திக்க திகட்டாமல்
எடுத்தியம்புகின்றன இலக்கியங்கள்.
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் பாரதியாரின் இந்த வைர வார்த்தைகள் தான் தமிழின் உலக தத்துவத்தை பறைசாற்றும்..
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - ஆக , தமிழர்களின்
உணர்வோடு இரண்டறக் கலந்து உயிர்மூச்சாக,
இரத்தமும் சதையுமாக வாழ்வதற்கு காரணமே தமிழின் பெருமை ஆகும்..
தமிழன் என்றொரு இனம் உண்டு ; தனியே அவனுக்கு
ஒரு குணம் உண்டு ,ஏனென்றால் தமிழர்கள்
உலகமெல்லாம்பரந்துவாழ்கின்றார்கள்.
தமிழகத்தில், இலங்கையில்,
மலேசியாவில் , மொரீசியசில் , சிங்கப்பூரில் ,
ஐரோப்பிய நாடுகளில் என எங்கெல்லாம் அவர்கள்
தேசம் விட்டு பிரிந்து சென்று வாழ்ந்தாலும் ,
தாம் வாழும் நாடுகளிலே , நமது தாய்மொழியை
விடாமல் மொழி உணர்வோடு அதனைப் பற்றிப்
பிடித்து வாழ்வதென்பது தமிழர்களின் மரபாகும் ;
அது தமிழரின் பண்பாடாகும்…
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கின்ற
தமிழ்மொழி அழகிலே மட்டும் உயர்ந்து
மகாபாரதம் , கம்பராமாயணம் போன்ற
மனித வாழ்வை மகிமைப்படுத்தும் ,
அகப்புற வாழ்வை செழுமைப்படுத்தும் ஆயிரம்
ஓடையிலே என் சாம்பல் ஓடுகின்ற போதும் ,
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழோடு
வாழ்வோம் தமிழால் வாழ்வோம்………..
Post a Comment